ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திங்கள் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன்,இன்று (07.09.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள்
கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்கள்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர். ந.சரவணன், திட்ட இயக்குநர் வளர்ச்சி முகமை. ச.செல்வராணி,நேர்முக உதவியாளர்.
பாக்கியலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியர். கீதாலட்சுமி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர். பூமா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலர். செந்தில் குமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர். பன்னீர்செல்வம் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக