நத்தம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழா!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது நிர்வாகவியல் துறைத் தலைவர் இராம நாராயணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் யாழ் சந்திரா அவர்கள் தலைமை தாங்கி விழா உரையாற்றினார். அப்போது டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் ஆங்கிலத்துரை தலைவர் திருமகள் மற்ற துறை சார்ந்த பேராசிரியர்களும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முத்தையா நன்றி கூறினார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் வணிக நிர்வாகவியல் துறை சார்ந்த மாணவர்கள் கல்லூரி சந்தை நடத்தினர்.
படவிளக்கம்: நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் கல்லூரி சந்தை அமைத்த மாணவர்களிடம் முதல்வர் யாழ் - சந்திரா பொருட்கள் வாங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக