டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சித்தலைவர். மு.அருணா IAS !!

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், இந்தியாவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர், இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் மருத்துவர் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர். மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (30.07.2026) அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.சுப்ரமணியன் அவர்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.எஸ்.கலைவாணி அவர்கள், ஆதீன சந்நிதானம் திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் .பிரகாஷ்; மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள், பயிற்சி செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!