"முதலமைச்ச விஜய் கர்நாடகா வரவேண்டாம்.." -டி.கே.சிவக்குமார்!!
தற்போது பதற்றமான சூழல் நிலவுவதால், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இப்போதைக்கு கர்நாடகா வரவேண்டாம்" என்று கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் (தமிழக வெற்றிக் கழகம் - TVK), வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூரு சென்று கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்தச் சூழலில் தான் கர்நாடகத் தரப்பில் இருந்து இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"முதலமைச்சர் விஜய் கர்நாடகா வந்தாலும் கூட, எங்களால் தற்போது தமிழ்நாட்டிற்குத் கூடுதல் தண்ணீர் திறந்துவிட முடியாது" என்றும், இது தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க உள்ளதாகவும் டி.கே.சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
ஹெலீகாப்டர் ரெடியா இருக்கு வாங்கன்னானுங்க, இப்போ வரவேணாம் வந்தாலும தண்ணிதரமுடியாதுங்கிறாங்க.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக