உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு நடத்திய வால்க் பார் நேச்சர் பெண்கள் விழிப்புணர்வு நடைப்பயணம்!!

கோவை மாவட்டம்,உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சர்வதேச சமூக மேம்பாடு அமைப்பு நடத்திய, வால்க் பார் நேச்சர் எனும் பெண்கள் விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் ஹேப்பி பீரியட்ஸ் நிகழ்வின் எட்டாவது நிறைவு விழா கோவையில் உள்ள நிர்மலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம், எட்டாம் தேதியில் துவங்கி பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், கிராமங்கள், தொழில் நிறுவனங்களில், உள்ள சுமார் 30,000 பெண்களுக்கு பெண்களின் மாதவிடாய், சுகாதார விழிப்புணர்வு, இயற்கை பாதுகாப்பு அவசியம், பற்றிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. 

இந்த நிகழ்ச்சியினை கல்லூரியின் செயலர் டாக்டர். குழந்தை தெரஸ் வழிகாட்டுதலின்படி, கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியின் தலைமை ஆசிரியர் டாக்டர் மேரி பபியோலா, ஆர்த்திடா குழுமத்தின் தலைவர் நீனா ஆர்த்திடா, பிடிஜி அறக்கட்டளை, மனிதவள மேம்பாட்டு நிர்வாகி சரண்யா பிரியா, ஹேப்பி பீரியட்ஸ் சாய் குமார், டிரஸ்ட் மேட் மருத்துவமனை டாக்டர் உத்ரா பிரியதர்ஷினி, ரியல் ரேலியப் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக்தங்கவேல், கோ பேட் நிறுவனர் சுபத்ராமோகன்ராஜ், மற்றும் ஐ.எஸ்.டி.ஓ மாநிலத் தலைவர் லாசர் ராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்வில் மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று இயற்கையை பாதுகாப்போம், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம், மாதவிடாய் சுகாதாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், என்ற உறுதி மொழியை ஏற்றுக்ககொண்டனர், இயற்கையையும், ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்ற மைய கருத்தும் வெளியிடப்பட்டது. இந்த விழா சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!