அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாம் சென்னை அகர்வால் மருத்துவமனை குழுவினருடன் அரக்கோணம் ரோட்டரி சங்கம் மற்றும் சிஎஸ்ஐ மத்திய பள்ளியுடனும் மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம்
இணைந்து நடத்திய முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர். மனோகர் பிரபு தலைமை தாங்கினார். கண் மருத்துவர் இயக்குனர். எம். எஸ். கோபி முன்னிலை வகித்தார். சமூகநல பொறுப்பாளர். எஸ். டி. ராஜேஷ் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ரோட்டரி சங்க தலைவரும் மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனருமான பி. இளங்கோ அவர்கள் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். சங்க நிர்வாகி விஜயகுமார் உட்பட டாக்டர் அகர்வால் மருத்துவ குழுவினர் முகாம் பணிகளில் ஈடுபட்டனர் இறுதியாக ரோட்டரி சங்க பொருளாளர். லட்சுமிபதி அனைவருக்கும் நன்றி கூறினார். முகாமில் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சிறப்பு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு