குற்றாலம் பேருந்து நிலையம் முன்பாக இரண்டு தனியார் பேருந்துகளின் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இடையே கடும் வாக்குவாதம்!!
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேருந்து நிலையம் முன்பாக இரண்டு தனியார் பேருந்துகளின் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இடையே கடும் வாக்குவாதம் பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு நடந்து கொண்டனர் தனியார் பேருந்துகள் குற்றாலம் பேருந்து நிலையத்தினுள் பேருந்துகளை நிறுத்தி ஆட்களை ஏற்றாமல் பேருந்து நிலையத்தின் எதிரே சாலையில் நிறுத்தி ஆட்களை ஏற்றுவதினால் இந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொது மக்களுக்கு இடையூறாகவும் பேருந்துகளை சாலையில் நிறுத்தி இடையூறு ஏற்படுத்தும் தனியார் பேருந்துகள் மீது தென்காசி மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக