குடியாத்தத்தில் . இந்து முன்னணி யினர் காவல் நிலையத்தில் புகார்!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள செதுக்கரை மலை உச்சியில் ஆகாய லிங்கேஸ்வரர் சமேதராக அமையப்பெற்றுள்ளது நூற்றாண்டுகளாக பலர் இந்த மலை உச்சியில் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வருகின்றனர்
இந்த மலையில் சித்தர்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது இந்த மலை மீது உள்ள ஆகாய லிங்கேஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரர் ஆகிய சிலைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகவிரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர் இதனை அறிந்த இந்து முன்னணியினரும் செதுக்கரை மலை சுற்றியுள்ள சிவ பக்தர்களும் இந்துக்களும் ஒன்றிணைந்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது
இதில் மாவட்ட செயலாளர்கள் யுவஷங்கர், அனீஷ் நகர தலைவர். ஏ. கே.குமார்,நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெகன், அண்ணாமலை , யோகி , ஆனந்த,ஆதிகேசவன் , மெய்வண்ணன். மாணிக்கம், ஆலய நிர்வாகிகள் மகாலிங்கம் ,விஜய், சேகர், சிவ பக்தர்கள் 50 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக