பண்ருட்டி அடுத்த வேலன்குப்பம் பாலமுருகன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வேலன்குப்பம், புதிய ஏரிக்கரையில் அமைந்துள்ள விநாயகர், பாலமுருகன், இடும்பன், கடம்பன் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக சுவாமிக்கு காலை விநாயகர் பூஜை, வருண பூஜை,
சந்திர பூஜை, சிவசூரியாராதனம், மூலிகை திரவிய ஹோமம், பூர்ணாஹுதி யாத்ராதானம் நடைபெற்று யாகசாலையிருந்து கடம் புறப்பாடாகி விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர் புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.
வேலன்குப்பம் கிராம முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக