தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!!
தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.50க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.முகூர்த்த நாளான இன்று ஏராளமான பத்திரப்பதிவுகள் நடைபெற்ற நிலையில் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.பல சார்பதிவாளர் அலுவலகங்களில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக