ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை தீர்வுநாள் கூட்டம்!!
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வாரந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 03.06.2026 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின், இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 29 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக