பேரணாம்பட்டு அருகே சிறுவன் கொடூர கொலை சிறுவனின் அத்தை கைது!!

குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு அருகே .6. வயது . சிறுவனை தென்னை மட்டையால் அடித்து கொலை செய்த . சிறுவனின் அத்தை ரேவதி என்பவரை போலீசார் கைது செய்தது. விசாரணை செய்து வருகின்றனர். 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள மேல்பட்டி . பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வர். வயது 35 இவர் திருப்பூரில் பனியன் கம்பெனிகள் வேலை செய்து வருகிறார்.அதே கம்பெனியில் வேலை செய்து வரும் ஆஷா .வயது..30.

இவர்களுக்கு திருமணம் ஆகி கடந்த .5. ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் கடந்த இரண்டு மாதங்களாக.திருப்பூரில் சேர்ந்து வாழ்ந்து வருவதாக தெரிய வருகிறது.

இவர்களுடைய..6

வயது சிறுவன் முகிலன். டி.டி மோட்டூரில். உள்ள தனது பாட்டி விஜயா வீட்டில் ஐந்து வருடமாக வசித்து வருகிறார்

இந்நிலையில். கடந்த 40 நாட்களாக ராஜேஷ் யின் தாய் விஜயா அவருடைய மகள் ரேவதி ஆகியோர் பராமரிப்பில் இருந்துள்ளான்

இந்நிலையில் திடீரென சிறுவன் நேற்று முன்தினம் உயிரிழந்து விட்டதாக வீட்டில் சிறுவனின் சடலத்தை வைத்து விட்டு சோகத்துடன் அமர்ந்திருந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு. பிரேத  பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சிறுவரின் பாட்டி விஜயா மற்றும் அவரது மகள் ரேவதி மாந்திரிகம் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் வீடு முழுவதும் மாந்திரீக தொடர்பான பொருள்கள் இருந்துள்ளது மேலும். தெருவில் உள்ள பொது கிணற்றில் மாந்திரீக பொருட்களை வீசுவது. போன்ற தொடர் செயலில் ஈடுபட்டு வந்ததாக தெரிய வருகிறது. 

இந்நிலைகள் அமாவாசை யாரை நேற்று முன்தினம் சிறுவனை நரபலி கொடுத்து இருக்கலாம் என்று உறவினர்களும் அப்பகுதியும் பொதுமக்களும் அச்சத்தில் இருந்து உள்ளனர். 

இதைக் குறித்து உயிரிழந்த சிறுவனி தாய் வழி உறவினர்கள் போலீசாரிடம் கூறியதாவது இரவில் தொலைபேசியில் எனது பேரன் முகிலன் கீழே விழுந்து அடிபட்டு விட்டதாக என்று கூறினார்கள் நாங்கள் சென்று பார்த்த போது வீட்டில் சடலமாக . இருந்தான். தலை . நசிங்கி உடலில் காயங்கள் இருந்தது இதனால் எனது பேரனை அடித்து கொலை செய்துள்ளார்கள். 

எனது மகள் ஆஷாவையும் ஏதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சகமாக உள்ளது அவனுக்கு உடலில் எந்த பிரச்சனையும் இல்லை இதை குறித்து விஜயா ரேவதியுடன் கேட்டால் சுவர் மீது ஏறி விழுந்ததில் இறந்து விட்டதாக கூறுகிறார்கள் அதில் உண்மை இல்லை ஆகவே எனது பேரனை அடித்துக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் அவர்கள் மாந்திரிகம் செய்பவர்கள் நேற்று முன்தினம் அமாவாசை என்பதால் நரபலி கொடுத்து இருக்கலாம் . என்று சந்தேகிக்கிறோம். 

ஆகவே இதைக் குறித்து காவல்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர் மேலும் இது தொடர்பாக குற்றச்சாட்டுகளான விஜயாவின் மகள் ரேவதியை நேற்று கைது செய்து பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் மேல்பட்டி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!