தோத்துதான் போனோம்... செத்து போகல; விஜய்க்கு ஏதாவது ஆனால் அதிமுக பொறுப்பல்ல: ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை!!


மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:தலைமை மீது மனத்தாங்கல் ஏற்பட்டு சிலர் எதிரியிடம் சரணாகதி அடைந்து வருகிறார்கள். இது வேதனையாக உள்ளது. நம்மை பார்த்து சில சில்லறை பசங்க சிரிப்பா சிரிக்கிறாங்க. நாங்க தோத்து தான் போயிட்டோம், தவிர செத்து போகல. மாயஜாலம் போல் விஜய்க்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளது. ஆகையால் ஆட்சி அதிகாரத்தை தேடி உங்களிடம் சிலர் வருகிறார்கள்.

உங்களுக்கு ஏதாவது ஒன்று ஆனால் அதற்கு அதிமுக பொறுப்பல்ல. தம்பி விஜய், உயிர் ஒருமுறை தான் போகும். உங்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன். அவ்வளவுதான். கைக்கூலிகளை வைத்து கொண்டு ஆள்பிடிக்கும் வேலையை நிறுத்தி கொள்ள வேண்டும். 50 சதவீத அதிமுகவினர் தவெகவிற்கு வந்துவிட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுவது பைத்தியக்கார தனமானது என்றார். அப்போது நிருபர்கள் ஆர்பி உதயகுமாரிடம், ‘விஜய்க்கு ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பு இல்லை என்று கூறினீர்களே? அப்படி என்ன நடந்து விடப்போகிறது என்று கேட்டதற்கு ‘ஒரு எச்சரிக்கையாகத்தான் செல்கிறேன்’ என்றார்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!