மதுரை சோழவந்தான் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா: தவெக எம்.எல்.ஏ. கார்த்திகேயன் திறந்து வைத்தார்!!

மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கான புதிய அலுவலகம்  பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. 

 இந்த அலுவலகத்தை (தவெக)  சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 விழாவில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அலுவலக திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ கார்த்திகேயன், “சோழவந்தான் தொகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை உடனுக்குடன் கேட்டு தீர்வு காணும் நோக்கில் இந்த சட்டமன்ற அலுவலகம் செயல்படும். மக்கள் எந்த நேரத்திலும் தங்களது தேவைகள், பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சி தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக தெரிவிக்கலாம். தொகுதி முன்னேற்றமே எங்களின் முதன்மை நோக்கம்” என்று தெரிவித்தார்.

மேலும், கல்வி, சாலை வசதி, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பாக மக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில் இந்த அலுவலகம் செயல்படும் என்றும் அவர் கூறினார்.

விழாவில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், சோழவந்தான் தொகுதியில் மக்கள் நலப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என உறுதியளித்தனர்.

 புதிய அலுவலகம் திறக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த அலுவலகம் மூலம் தொகுதி மக்களின் குறைகள் விரைவாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை பொதுமக்கள் தெரிவித்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!