வேலூரில் வட மாநில வாலிபர் திருட வந்தார் என நினைத்து மக்கள் அடித்து கொன்றனர்! போலீசார் தீவிர விசாரணை!!
வேலூர் மாவட்டம்,வேலூரில் (வட மாநிலம்) மேற்கு வங்கத்தை சேர்ந்த ஜாய்ஹிந்த் முண்டா (39) இவர் இங்கு வேலூரில் தங்கி பணியாற்றி வந்தார் இவர் இரவில் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது நள்ளிரவில் 12 மணிக்கு மேல் நைனியப்பன் தெருவில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் இவர் திருட வந்ததாக அடித்து விரட்டினார்கள் பின்னர் இவர் செல்லியம்மன் கோவில் தெருவில் வந்த போது ஒரு வீட்டின் கதவை தட்டியுள்ளார் அதனால் அந்த பகுதியில் இருந்தவர்களும் அடித்துள்ளனர் இதனால் மயங்கி; அவர் வடக்கு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்த போனார். வட மாநிலத்தை சேர்ந்தவர் திருட வந்தார் என மக்கள் அடித்ததில் அவர் இறந்துவிட்டார் இதனை வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இறந்த உடலை பிரேத பரிசோதனக்காக் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக