பழைய குற்றால அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி!!
தென்காசி மாவட்டம், குற்றாலம். பழைய குற்றாலம் அருவிப் பகுதியில் கடந்த பல மாதங்களாக சுற்றுலா மேம்பாட்டு பணி நடைபெற்று வந்ததன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பழைய குற்றால அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தது தற்போது அருவி பகுதியில் முழுமையாக பணி நிறைவடைந்ததன் காரணமாக இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது கடந்த இரண்டு நாட்களாக குற்றாலத்தில் அவ்வப்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருப்பதால் சீசன் களைகட்ட துவங்கி உள்ளது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக