குடியாத்தத்தில் குறைத்த கூலியை மீண்டும் வழங்க கோரி நெசவாளர்கள் கோரிக்கை மனு!!
வேலூர் மாவட்டம். குடியாத்தம் வட்டத்தில் உள்ள கைத்தறி தொழில் செய்து வரும் பல ஆயிரக்கணக்கானோர் லுங்கி ரகம் உற்பத்தி செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 16 மீட்டர் .8. லுங்கிகள் கொண்டது அவற்றிற்கு கூலியாக ரூபாய் 2200 வழங்கி வந்தார்கள், தற்போது திடீரென மேற்படி லுங்கி தரத்திற்கு ரூபாய் 200 கூலியை குறைத்து. நடைமுறை படித்து உள்ளார்கள் இதனால் நெசவாளர்கள். சங்க மாவட்டத் தலைவர் ஜெயவேலு தலைமையில் ஓ பி சி .அனி. மாநில துணை .தலைவர் . ஜெலேந்திரன் முன்னிலையில் மற்றும் நெசவாளர்கள் ஜே சிதம்பரம் பி லாலாஜபதி . கே இ சரத் சந்தர் ஜி குணசேகரன் ஜி நேரு ஜே கந்தன் சி தண்டபாணி ஆகியோர் இன்று காலை வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து. துணை வட்டாட்சியர் தனலட்சுமி இடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதில் நெசவாளர்களுடன் உப தொழில் ஈடுபட்டுள்ள . நூல் இழைத்தல் தார் சுற்றுதல் பழுது பார்ப்பதால் போன்ற வேலையை பகிர்ந்து அளிக்க முடியாத சூழ்நிலையில் தற்போது வழங்கி வந்த 2200 கூலியை 200 கொடுத்ததால் மாதம் ஒன்றிற்கு ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூபாய் ஆயிரம் எழுப்பவும் நெசவாளி மாதம் வருமான ரூபாய் பத்தாயிரம் கூட பெற முடியாத நிலைகள் உள்ள. நெசவாளர்களுக்கு இக்கூலி குறைப்பு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலை. ஏற்பட்டுள்ளது எனவே லுங்கி உற்பத்தியாளர்களையும் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள். அழைத்து பேசி கூலி குறைப்பை. கைவிட வலியுறுத்துமாறு நெசவாளர்கள் நலன் கருதி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கருத்துகள்
கருத்துரையிடுக