பெங்களூரு வந்தடைந்தது முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்!!
பெங்களூரு மெட்ரோவின் நீல வழித்தடத்திற்கான (ப்ளூ லைன்) முதல் ஓட்டுநர் இல்லா ரயில், பையப்பனஹள்ளி பணிமனைக்கு வந்தடைந்தது.
சில்க் போர்டு-விமான நிலையம் வரை இயக்கப்படவுள்ள இந்த ரயில், தற்போது சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முழுமையான சோதனை ஓட்டங்கள் அக்டோபரில் தொடங்க வாய்ப்புள்ளதுடன், 2026 டிசம்பருக்குள் முதல் பகுதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக