வாலாஜா தாலுக்கா 1435-ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட வருவாய் அலுவலர். பேபி இந்திரா பங்கேற்பு !!
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தாலுக்கா அலுவலகத்தில் 1435-ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர். பேபி இந்திரா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல் நாளான விஷாரம் உள் வட்டத்தில் உள்ள அரப்பாக்கம், அருங்குன்றம்,மேலகுப்பம், திம்மணாச்சாரி குப்பம், கீழ்மின்னல் கத்தியவாடி, தாழனூர், கூராம்பாடி, ஆயிலம்,கீழ்குப்பம் , நந்தியாலம்,வேப்பூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் வட்டாட்சியர். நடராஜனிடம் மனுக்களை வழங்கி பரிசீலனை செய்து உடனடி தீர்வு காண உத்தரவிட்டார் ஜமாபந்தியின் முதல் நாள் 72 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள் விஷாரம் ராஜேஷ், ராணிப்பேட்டை சௌந்தரராஜன், வாலாஜா சுரேஷ் கிராம நிர்வாக அலுவலர்கள் சிவகுமார், பார்த்திபன்,பழனி மற்றும் நில அளவையர்கள், கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக