டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் “நிமிர் – THE RISING TEAM” தொடக்கம்!!
கன்னியாகுமரி மாவட்டம்,மலைவாழ் மக்களின் குழந்தைகள் உட்பட பல்வேறு சூழ்நிலைகளால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய 483 மாணவ மாணவிகளின் கல்வியை மீண்டும் தொடரச் செய்து, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வழிகாட்டிய
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் “நிமிர் – THE RISING TEAM”
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி “நிமிர் (The Rising Team)” என்ற போக்சோ விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
போக்சோ குற்றங்கள் இல்லாத, குழந்தைகள் பாதுகாப்பாக வளரக்கூடிய கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு தொடர்ந்து கண்காணித்து வழிகாட்டி வருகிறது.
அதில் குறிப்பாக,பெற்றோர் இல்லாத குழந்தைகள் ஒரு பெற்றோர் மட்டுமே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு ஆளான குழந்தைகள் குடும்ப மற்றும் பொருளாதார சிக்கல்களால் பள்ளிப்படிப்பை கைவிட்ட மாணவர்கள் செல்போன் பயன்பாட்டிற்கு அடிமையான குழந்தைகள்
Free Fire உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான மாணவர்கள்
போன்ற பல்வேறு அபாய சூழ்நிலைகளில் இருந்த குழந்தைகள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட்டது.
அதன் விளைவாக, பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 483 மாணவ மாணவிகள் மீண்டும் கல்வியுடன் இணைக்கப்பட்டு, அவர்களின் பள்ளிப்படிப்பு தொடர உறுதி செய்யப்பட்டது.
மேலும், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நிலையில் இருந்த மாணவர்களில், நிமிர் குழுவின் தொடர் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பின் மூலம் மீண்டும் கல்வியை தொடர்ந்த 172 மாணவ மாணவிகள், தற்போது நடைபெற்ற 10ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனை முன்னிட்டு, கல்வியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் ஒன்று கூடல் நிகழ்ச்சி இன்று (25.05.2026) கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளையும், நிமிர் குழுவில் பணியாற்றிய போலீசாரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும், மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்குத் தேவையான முழுமையான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியளித்தார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக