குடியாத்தம் வடக்கு திமுக சார்பில் கள ஆய்வு கூட்டம் வேலூர் MP.கதிர்ஆனந்த் பங்கேற்பு!!
வேலூர் மாவட்டம், கே வி குப்பம் சட்டமன்ற தோல்வி குறித்து திமுக சார்பில் திமுகவின் தோல்விக்கு காரணம் குறித்து குழு அமைக்கப்பட்ட நிலையில் குழுவில் எழும்பூர் தொகுதியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர். பரந்தாமன்,ராஜ்சபா உறுப்பினர். ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் குடியாத்தம் காந்தி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு குழுவிடம் திமுகவின் தோல்விகான காரணங்கள் குறித்து பதிவு செய்தனர்.
இதில் வேலூர் எம்.பியும் தெற்கு மாவட்ட செயலாளர் கதிர்ஆனந்த் K.V.குப்பம் தொகுதியில் போட்டியிட்ட மருத்துவர் ராஜேஸ்வரி குடியாத்தம் ஓன்றிய குழு தலைவர் சத்தியானந்தம் ஓன்றிய செயலாளர்கள் நத்தம் பிரதீஷ் , அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக