குடியாத்தம் அடுத்த வளத்தூர் ஊராட்சி ராசம்பட்டியில் நடைபெற்ற ஸ்ரீ காளியம்மன் கோயில் திருவிழா!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வளத்தூர் ஊராட்சி ராசம்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் காளியம்மன், கங்கை அம்மன், ஸ்ரீ முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் துர்கா தேவி, லட்சுமி சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அம்மன்னுக்கு கூழ் வார்த்தல் பொங்கல். வைத்தல் மற்றும் இரவு வான வேடிக்கை மாவிளக்கு ஊர்வலமும். புஷ்ப பல்லுக்கு திருவீதி உலா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை நாட்டமை எஸ். குணசேகரன் மேட்டுக்குடி வில்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர். நிர்மலா சேட்டு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக