தங்கமான மனிதர்கள் நம் தமிழ் நாட்டில் இன்னும் வாழ்ந்துவருகிறார்கள்!!
கோவை குப்பைக்குள் மின்னிய 3 சவரன்.. அப்படியே ஒப்படைத்த தங்கம்! தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு கோவை: இன்றைய அவசர உலகில் மனிதர்களுக்கு இடையே மனிதாபிமானம் என்பது அரிதாகி வருகிறது. அதிலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத நேர்மை என்பது இந்த காலத்தில் ஒரு பேரதிசயமாகவே பார்க்கப்படுகிறது.. மொத்தமும் பணம்தான் வாழ்க்கை என்று ஓடிக்கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில், வறுமையிலும் நேர்மையாக வாழக்கூடியவர்கள் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அதிசயமான நபர்தான் கோவையை சேர்ந்த தூய்மைப் பணியாளர் . மற்றும் துரை என்பவர் தங்க நகைகள்
குப்பை சேகரிக்கும்போது பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 45 பவுன் தங்க நகைகளைக் கண்டெடுத்து, மிகுந்த நேர்மையுடன் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.. நங்கநல்லூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தற்செயலாகத் தவறிவிட்ட அந்த நகைகள், முறையாகச் சரிபார்க்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.இது போல தங்கமான மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக