குடியாத்தத்தில் நடைபெற்ற மாபெரும் அன்னதானம்!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் கங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு உள்ளி கூட் ரோட்டில் இரண்டாம் ஆண்டு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் குமரன் சாந்தி மோகன் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர் பௌத்த சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் இராசி. தலித் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கேத்ரின் மேரி பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கினார். அன்னதான நிகழ்ச்சியை சாமு பாபு ராஜேஷ் கபாலி மற்றும் பலர் ஏற்பாடு செய்திருந்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக