பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்!- முதலமைச்சர். ஜோசப் விஜய்!!
''அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும்''
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது
மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது
குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்
வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவு.
குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவு.
- முதலமைச்சர் ஜோசப் விஜய்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக