குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை கிராமத்தில் எட்டியம்மன் கோயில் நடைபெற்ற திருவிழா! அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் அடுத்த மேல்முட்டுக்கூர், தட்டாங் குட்டை கிராமத்தில் எட் டியம்மன் கோயில் திரு விழா நடந்தது. முன்னதாக கடந்த ஏப். 22ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டு தல் தொடங்கியது.
தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு கூழ் வார்த்தல், இரவு 8 மணிக்கு கரகாட்டத்துடன் அம்மன் திருவீதி உலா மற்றும் வாணவேடிக்கை நடந்தது.
இன்று பகல் 2 மணிக்கு கும்பம் சோறு, மாவிளக்கு படைத்தல், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8 மணிக்கு அம்மன் தாலாட்டு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்கான ஏற் பாடுகளை கோயில் நிர் வாகிகள், ஊர் பெரியவர்
பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக