விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம்!!

தமிழக ஆளுநர் மாளிகை (லோக்பவன்), தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்து இன்று (மே 07, 2026) முக்கிய விளக்கம் அளித்துள்ளது.

சட்டப்பேரவையில் யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று ஆளுநர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சி அமைக்க அழைக்க அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தவெக 108 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவை உறுதிப்படுத்த வேண்டும்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளிப்பதாகக் கூறி 113 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் தவெக உரிமை கோரியுள்ள நிலையில், மீதமுள்ள ஆதரவு மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார்.

 ஆளுநரின் இந்த முடிவை அரசியல் சாசனப்பிரிவு 361-ன் படி எளிதில் கேள்வி கேட்க முடியாது என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!