மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள ஆவிச்சிப்பட்டியைச் சேர்ந்த செழியன் மகன் கிஷோர் பாண்டியன் (17). செழியன் இறந்துவிட்டதால், அவரது இருசக்கர வாகன சர்வீஸ் மையத்தை கிஷோர் பாண்டியன் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,சனிக்கிழமை சர்வீஸ் மையத்தில் இருசக்கர வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கிஷோர் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி கூற் ஆய்விறற்காகக நத்தம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக