ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது!!
இராணிப் பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் ஜி.கே.மில்லேனியா ஒட்டலில் மாவட்ட அவைத்தலைவர். A.K.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் இராணிப் பேட்டை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காந்தி.அவர்கள் கலந்து கொண்டு தமிழின தலைவர். கலைஞர் அவர்களின் பிறந்தநாள் எளிமையான முறையில் கொண்டாடுவது குறித்து பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர்கள். துரைமஸ்தான்,குமுதா குமார் சோளிங்கர் மு சட்டமன்ற உறுப்பினர். N.G.பார்த்திபன்,ஜி.கே.குழுமம் சந்தோஷ் காந்தி மற்றும் தலைமை செயற்குழு. பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள்,ஒன்றிய நகராட்சி பேரூராட்சி உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள். கலந்து கொண்டார்கள்.இறுதியாக மாவட்ட துணை செயலாளர். மு.சிவானந்தம் நன்றி கூறினார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக