மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர். கே.ஜே. பிரவீன் குமார், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை தூய்மை பணியை துவக்கி வைத்தனர்!!
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர். கே.ஜே. பிரவீன் குமார் IAS அவர்கள் மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை தூய்மை பணியை துவக்கி வைத்தனர்.
மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், வக்பு வாரியக் கல்லூரி வளாகத்தில் மாபெரும் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார்கள்.
இந்த மாபெரும் தூய்மை பணியில் 2 டிராக்டர்கள், 1 ஜே.சி.பி. இயந்திரம், 2 காம்பாக்டர் வாகனங்கள் மற்றும் 2 டிப்பர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டன.மேலும், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வின் போது சுற்றுச்சூழலை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக