தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை!!
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி,
மதுரை மற்றும் காரைக்குடி பகுதிகளில் தற்போது கடுமையான கோடை மழை பெய்து வரும் நிலையில், இத்தகைய கோடை மழை அடுத்த 10 நாட்களுக்குத் தமிழகத்தின் உட்புற மாவட்டங்கள், மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது;
குறிப்பாக கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கத்தால் வாடி வந்த மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு இந்த மழை ஒரு மிகப்பெரிய நிம்மதியையும் குளிர்ச்சியையும் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக