குடியாத்தம் அருகே பட்டு ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத புதிய அங்கன்வாடி மையம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம் பட்டு ஊராட்சியில் கடந்த 2021 2022 ஆண்டில் PMA 6Y திட்டத்தின் மூலம் புதிய அங்கன்வாடி மையம் சுமார் .12.லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கபட்டு இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குழந்தைகளுக்கு அங்கன்வாடி இருந்தும் செயல்படவில்லை என்றுஅவதிப்பட்டு வருகிறார்கள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் வசதிக்காக புதிய அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . என்று கோரிக்கை எழுந்துள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக