குடியாத்தம் வள்ளலார் அன்னமுது குடில் சார்பில் நடைபெற்ற வள்ளலார் அன்னமுது குடில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் வள்ளலார் அன்னமுது குடில் சார்பில் வள்ளலார் அன்னமுது குடில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா தர்ம சாலை நிறுவிய நன்னாள் விழா திருவள்ளுவர் உலகிற்கு வழங்கிய திருக்குறள் கொண்டாடும் விழா ஆகிய முப்பெரும் விழா குடியாத்தம் போடிப்பட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
நிர்வாகி கோமதி செயலாளர். கோதண்டபாணி, பொருளாளர். பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர். பிரதீப் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக . நகர மன்ற தலைவர்.எஸ்.சௌந்தரராஜன் கொண்டார்.
நிகழ்ச்சியில் குடியாத்தம் வட்டாரத்தில் 10 மற்றும் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் நினைவுப்பரிசு வழங்கினர்.
இறுதியில்துணைச் செயலாளர். முரளி நன்றி தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக