வீரத்தமிழ்ப் பேரரசு மருதுபாண்டியர் கல்வி அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா!!
தேனி மாவட்டம்,மேல்மங்கலம் ஸ்ரீ மாயா பாண்டீஸ்வரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மதிப்பிற்குரிய ஆ.நாராயணன் அவர்களுக்கு வீரத்தமிழ்ப் பேரரசு மருதுபாண்டியர் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.வெ.ஜெயமணி, கவிஞர். அ. பாண்டியமகிழன், நீ.குமார், அ.பாலகிருஷ்ணன், முத்துசரவணன், மகேஸ்வரன், கார்த்திகேயன், முருகேசன், காமாட்சி பாண்டியன், சரவணன் , செல்வகுமார், மாயாண்டி,
பவுன்முத்து, ராஜேந்திரன், முத்தையா, அமர்பிரியா, நாகலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெரியகுளம் வட்டத்தில் 2025-26 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு விருது பரிசளிப்பு விழா நடைபெறும் என்ற தீர்மானம் நிறைவேற்றி விரைவில் விழா நடைபெற ஆயத்தப்படுத்தப்பட்டது. ஆ.நாராயணன் ஆசிரியர் அவர்கள் நன்றி கூறினார்.
தேனி மாவட்டம் புகைப்பட கலைஞர் விஜய்.

கருத்துகள்
கருத்துரையிடுக