தேனி அருகே அரசு பேருந்து விபத்து தடுப்புச் சுவரில் மோதி பயணிகள் காயம்!!
மதுரையிலிருந்து தேனி நோக்கி வந்த அரசு பேருந்து, குன்னூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாகச் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். கானாவிலக்கு போலீஸார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக