சிவகங்கை மாவட்டம், கல்லலில் நற்கனி அம்மன் மஞ்சுவிரட்டை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் குதிரை வண்டி பந்தயம்!!
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்தில் ஸ்ரீ நற்கனி அம்மன் திருவிழாவை முன்னிட்டு
நேற்று நடைபெற்ற மாபெரும் குதிரை வண்டிப் பந்தயம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல பகுதிகளில் இருந்தும் குதிரை வண்டிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டன.
இந்த விறுவிறுப்பான குதிரை வண்டிப் பந்தயத்தில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த குதிரை வண்டிகளின் விவரம் பின்வருமாறு:
முதலிடம்: கல்லல் வெல்கம் பிராய்லர்ஸ்
இரண்டாமிடம்: திருச்சி எலி
மூன்றாமிடம்: கும்பகோணம் அம்மன் கார்ஸ்
வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வைக் காண ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்
கருத்துரையிடுக