மீண்டும் அதிகாரப்பூர்வ நாளிதழ், ஊடகத்தை பறிகொடுத்த அதிமுக!!
*ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு என்பது அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கிறது.*
*இதனால் அக்கட்சி அதிகாரப்பூர்வ நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களை பறிகொடுத்து நிற்கிறது.*
*அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்தது ‘நமது எம்.ஜி.ஆர்.’ ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இது டிடிவி தினகரன் வசம் சென்றது.*
*அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஊடகமாக இருந்த ‘ஜெயா டிவி’ சசிகலாவின் வசம் சென்றது. அதிமுகவில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட பின்னர்*
*அதிமுகவுக்கு என்று அதிகாரப்பூர்வ ஊடகமாக உருவனாது ‘நியூஸ் ஜெ’. அதே போன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக உருவானது ‘நமது அம்மா*
*நமது அம்மா மற்றும் நியூஸ் ஜெ இரண்டும் சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோரால் இயங்கி வந்தது. தற்போது அதிமுகவில் மேலும் ஏற்பட்ட பிளவில் சண்முகம், வேலுமணி இருவரும் தனி அணி அமைத்திருப்பதால் அவர்கள் கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.*
*இதையடுத்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தொடர்பான செய்திகள் இவற்றில் புறக்கணிக்கப்பட்டுள்ளன*
*இதனால், அதிமுகவுக்கு என்று மீண்டும் ஒரு அதிகாரப்பூர்வ நாளிதழ், ஊடகம் உருவாக்க தேவை ஏற்பட்டிருக்கிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக