குற்றச்சாட்டை புறம்தள்ள முடியாது!-அன்பில் மகேஸ் பொய்யாமொழி!!
திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மூக்கு கட்டியை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
கவனக்குறைவோடு சிகிச்சை அளிக்கப்பட்டதே இந்த உயிரிழப்புக்கு காரணம் என அதே மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த சக மாணவியரும், சீதாலட்சுமியின் பெற்றோர் - உறவினர்கள் ஆகியோரும் குற்றம்சாட்டி வருவதை புறம்தள்ள முடியாது.
உரிய விசாரணை மேற்கொண்டு, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தல்!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக