குடியாத்தத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாநில தழுவிய போராட்டம!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர். கே. சாமிநாதன் மாவட்ட செயலாளர். எஸ். மகேஷ்பாபு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சி. தசரதன், எஸ். கோடீஸ்வரன்,கே. பாண்டுரங்கன், எம். சிவஞானம், டி. கோவிந்தன்.ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கை விளக்க உரை தோழர்கள். துரை செல்வம்.கே.சி. பிரேம்குமார், ஜி. நரசிம்மன்,நா.பரமசிவம்ஆகியோர் விளக்கவுரை. ஆற்றினார்கள்.
ஒன்றிய அரசே உரம் விலை உயர்வை உடனே ரத்து செய்ய கோரியும்; மாநில அரசே கூட்டுறவு பயிர் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும்;
மோர் தானா அணையை சுற்றுலா தளமாகக.கோரியும்,பத்தலபள்ளி அனையைவிரைவாககட்டகோரியும், குடியாத்தத்தில் மாட்டு சந்தையை மீண்டும் அமைக்க கேட்டும்;
அனைத்து ஏரிகளையும் தூர்வார கோரியும்,100.நாள் வேலையின் பெயரை மீண்டும் பழைய பெயரிலே வழங்க வேண்டும்,
அக்ராவரம் -மீனூர் இடையே கவுண்டன்ய ஆற்றில் மேம்பாலம் அமைக்க கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இறுதியில் சுப்பிரமணி நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக