அமைச்சருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்!!
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் மின்விசிறி வேண்டி மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் அவர்களிடம் கோரிக்கைகள் வைத்தனர்.
கோரிக்கை வைத்த 24 மணி நேரத்தில் பொதுமக்கள் கோரிக்கை வைத்த இடத்தில் மின் விசிறி வசதி உடனடியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு செய்த தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் அவர்களுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக