அரியரை முடிக்காத அமைச்சர்!!
ராஜ்மோகனின்.. கல்வித்தகுதி போலி? புயலைக் கிளப்பும் குற்றச்சாட்டுகள்!தமிழ்நாட்டின் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களின் கல்வித்தகுதி குறித்து தற்போது சமூக வலைதளங்களில் மிகக் கடுமையான விவாதங்களும், பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த கல்வித் தரத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சரின் கல்வித்தகுதியே கேள்விக்குறியாகி இருப்பது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் படித்து, இன்று வரை தனது அரியர் பாடங்களை முடிக்காமல், கடந்த வருடம் வரை கூட அரியர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த ஒரு மாணவர் தான் என்ற ஒரு குற்றச்சாட்டு முதன்மையாக வைக்கப்படுகிறது.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக