குடியாத்தத்தில் 96 வது மாதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு நல திட்டங்கள் வழங்கிய மாற்றுத்திறனாளி!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 96 வது.மாதமாக மாதந்தோறும் தொடர்ந்து . மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் விதவைகளுக்கு தன்னுடைய சொந்த செலவில் அரிசி, பருப்பு, சேமியா, ரவை ,புடவை, போர்வைகள் போன்ற நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கே.வி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்ப அழைப்பாளராக முன்னாள் நகர மன்ற உறுப்பினர் .வி.இ.கருணா இன்னர் வீல் முன்னாள் தலைவி. கீதாலட்சுமி இனியன் டைம்ஸ் ஆசிரியர். யுவராஜ்
செய்தியாளர். வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு . வாழ்த்துரை வழங்கி நல திட்டங்களை வழங்கினார்கள்
இதில் மாற்றுத்திறனாளிகள் விதவைகள் சலவை தொழிலாளர்கள் என்றுஅ சுமார் .80. க்கும் மேற்பட்டவர்களுக்கு நல சட்டங்கள் வழங்கப்பட்டது
இறுதியில் ஜெயசாரதி நன்றியுரை கூறினார்.
குடியாத்தம் செய்தியாளர் கே வி ஆர்.

கருத்துகள்
கருத்துரையிடுக