குடியாத்தத்தில் 210 பள்ளி வாகனங்கள் ஆய்வு!!
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் 210 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர். சுப்புலட்சுமி IAS அவர்களின் உத்தரவின் பேரில்
ஆய்வு செய்யும் பணி காந்தி நகரில் உள்ள ராஜகோபால் பாலிடெக்னிக் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர். ஆர். சுந்தர்ராஜன் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர். சுபலட்சுமி .காவல் துணை கண்காணிப்பாளர். சுரேஷ் வட்டாட்சியர் பிரியா மோட்டார் வாகன ஆய்வாளர். ராஜ்குமார் வட்டார கல்வி அலுவலர். லிங்கம் வாகன ஆய்வாளர். அலுவலக மேற்பார்வையாளர். ரேகா ஆகியோர் பங்கேற்றனர். இதில் குடியாத்தம் பேர்ணாம்பட்டு, பரதராமி. கே வி குப்பம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதியில் உள்ள 39 பள்ளிகளின் சுமார் 28 வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றுகள் வழங்கினார்கள்.
குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்


கருத்துகள்
கருத்துரையிடுக