1940களில் அதிகம் சம்பளம் வாங்கிய முன்னணி நாயகிகளில் ஒருவர்!!
1940களில் அதிகம் சம்பளம் வாங்கிய முன்னணி நாயகிகளில் ஒருவர்:
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, மோகினி, மருதநாட்டு இளவரசி, தேவகி போன்ற படங்கள் ஒவ்வொன்றும் திரைப்பயணத்தில் மைல்கல்.
சட்ட ரீதியாக எம்ஜிஆருக்காக பத்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்து எம்ஜிஆரின் மனைவியானவர்.
எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு பிறகு தவறான வழிகாட்டுதல்களுக்கு இரையானவர்.
கலெக்டரின் மனைவி என்பதாலேயே பைலில் கையெழுத்து போடும் அதிகாரமும் உள்ளது என்று நம்பி ஏமாந்து போனவர்.
ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களுக்கு ராஜமாதாவாய் ஒரு கௌரவமான இடத்தில் இருக்க வேண்டியவர், சுயநலத்துக்காக பகடைக்காய் உருட்டுபவர்களிடம் சிக்கி, சட்ட தலைவர் சட்டசபை அடிதடி, அரசு கவிழ்ப்பு, தேர்தலில் தோல்வி என எதிர்மற அரசியல் வரலாற்றை தேடிக் கொண்டவர்.
அரசியல், கட்சி, மக்கள் செல்வாக்கு போன்றவை சுலபத்தில் வசப்படாது என்று தெரிந்ததும் கௌரவமாக ஒதுங்கிக் கொண்டவர்.
அதிமுகவின் தலைமை கழக கட்டிடம் என்றென்றைக்கும் கடமைப்பட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் வி.என். ஜானகி எம்ஜிஆரின் 30-ம்ஆண்டு நினைவு தினம் இன்று..
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக