12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை!!
புதுக்கோட்டைமாவட்டம்,புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கம்போல் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். மாணவர்கள் 58, மாணவிகள் 38 மொத்தம் தேர்வு எழுதிய 96 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
ரா. யாழினி, த. முகமது அர்ஷத், க.ராகவி ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
கணிணி அறிவியல் பாடத்தில் த. முகமது அர்ஷத், கே.சுஜித்தா,ஆர்.திவ்ய ஸ்ரீ, மா.ராகுல், சா.முகமது இர்பான், ஆகிய மாணவர்கள் நூற்றுக்கு நூறு (100/100) மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழ் பாடத்தில் த.முகமது அர்ஷத், உ.அபுபக்கர் சித்திக், ரா.தருண், ம.ரித்திகா, ஆகிய மாணவர்கள் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது (99/100) மதிப்பெண் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர். தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர். அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர். ரா.சுதர்சன், துணை முதல்வர். குமாரவேல், ஆசிரியர்கள், கோகிலா, ராஜாமணி, சின்னையா, பால்ராஜ் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள். கௌரி, அபிராமசுந்தரி ஆகியோர் பாராட்டி இனிப்புகள் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.



கருத்துகள்
கருத்துரையிடுக