புதுக்கோட்டையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.100 சதவீதம் தேர்ச்சி!!
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வழங்கம்போல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்கள் 50 மாணவிகள் 32 மொத்தம் தேர்வு எழுதிய 82 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
எம். முகமது அலி கே.ஜீவிதா, எம். லோகஸ்ரீ ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
தமிழ் பாடத்தில் எம். முகமது அலி 99 மதிப்பெண்ணும், அறிவியல் பாடத்தில் ஏ.சிவதர்சினி 99 மதிப்பெண்ணும் சமூக அறிவியல் பாடத்தில் எம். முகமது அலி 99 மதிப்பெண்ணும் பெற்றுள்னர்.
பொதுத்தேர்வில் வெற்றி;யடைந்த மாணவர்களுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, இயக்குனர் ரா.சுதர்சன் ஆகியோர் வாழத்துக்களை தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக