குடியாத்தம் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினரும், சுதந்திர போராட்ட தியாகியுமான டிஎன் . சவுத்ரி நாயுடு மனைவியின் கண் மற்றும் உடல் தானம்!!
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் ராஜா கோயில் லேட் சுதந்திரப் போராட்டத் தியாகி . டி என் சௌத்திரி நாயுடு அவர்களின் மனைவியும், ரோட்டரி சங்க மூத்த உறுப்பினரும், முன்னாள் தலைவருமான Rtn T.N. ராஜேந்திரன் அவர்களின் அன்பு தாயாருமான திருமதி T. N. சாரதாம்மாள்(வயது 98)இன்று காலை 9மணியளவில வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அன்னாரின் மகன் மற்றும் குடும்பத்தார் ஒப்புதலுடன் அவரது கண்கள் வேலூர் C.M.C. கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. நாளை அம்மையாரின் உடல்தானத்திற்கும்ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கண் உடல்தானக் குழு தலைவர் எம்.ஆர்.மணி செய்தார்.
குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக