வாக்கு என்பது உரிமை மட்டுமல்ல – மக்களின் கடமை!வாக்குப்பதிவு மூலம் ஜனநாயகத்தை காத்த மக்கள்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்டத்தில் 84.50% வாக்குப்பதிவு!
மக்கள் சக்தி வெடித்தது – பல தொகுதிகளில் 85% மேல் பதிவு
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் மொத்தமாக 84.50% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்கள் ஜனநாயக உரிமையை உற்சாகமாக பயன்படுத்தினர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடி (87.36%), புவனகிரி (86.51%), நெய்வேலி (86.28%) ஆகிய தொகுதிகள் முன்னிலை பெற்றுள்ளன.
பண்ருட்டி (85.37%), விருதாச்சலம் (84.82%), கடலூர் (83.42%), சிதம்பரம் (83.02%) ஆகிய பகுதிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அதேவேளை, திட்டக்குடி (82.68%), காட்டுமன்னார்கோவில் (80.92%) ஆகிய தொகுதிகளில் ஒப்பீட்டளவில் குறைவான பதிவு காணப்பட்டது.
மொத்தத்தில், இந்த மாபெரும் வாக்குப்பதிவு மக்கள் தீர்ப்பின் வலிமையை வெளிப்படுத்தி, அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக