கடலூர் மாவட்டத்தில் தேர்தல் அன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!

கடலூர் மாவட்டம்,தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,590 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாக்களிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ். அவர்கள் தலைமையில்,

கூடுதல் காவல் கண்காணிபாளர்கள் , துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள்,  உதவி ஆய்வாளர்கள், தலைமைக்காவலர்கள், காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ஊர்க்காவல் படையினர், துணை ராணுவப் படையினர் மற்றும் கர்நாடக ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 4,500 காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளை  அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் கட்சிக் கொடிகள், பதாகைகள், சின்னங்கள் வைத்தல் மற்றும் தேர்தல் பிரச்சாரம் செய்தல் கூடாது. வாக்குச்சாவடிக்குள்தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்தல் அன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!