பெரும்பாடி ஊராட்சியில் அதிமுக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்!!
பெரும்பாடி ஊராட்சியில் அதிமுக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்! ஆதி திராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா பெற்று தரப்படும்வேட்பாளர் தேர்தல் வாக்குறுதி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு குடியாத்தம் ஏப் 16 : நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொது தேர்தலில் , தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பரிதா புருஷோத்தமன் நேற்று குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர் சிவா தலைமையில் , குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில் வாக்கு சேகரித்தார் ,அப்பொழுது அம்பேத்கர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் இருவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
பின்னர் கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட இளைஞரணி தலைவர் பேராசிரியை லாவண்யா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு , வேட்பாளர் பரிதா புருஷோத்தமனுக்கு சால்வை , மாலை அணிவித்து , கிரீடம் வைத்தார் .பின்னர் கேக் வெட்டி சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்பொழுது பெரும்பாடி கிராம ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா , அம்பேத்கர் சிலை , அரசு ஆதி திராவிடர் ஆரம்பப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்வு உள்ளிட்டவை குறித்து தேர்தல் வாக்குறுதி அளித்தார்மேலும் அதேபோல் எர்தாங்கள் , சேம்பள்ளி , அக்ரஹாரம் , மூங்கப்பட்டு , சீவூர் ஆகிய ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தார்.
குடியாத்தம் செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக